வெள்ளி, 17 பிப்ரவரி, 2012

அந்த பொன்னும் ஈரோடு தான் !!!

செம காமடி பாஸ், "நேத்திக்கு காலைல 6  மணிக்கெல்லாம் முழிப்பு வந்துடுச்சு, என்ன பண்ணேன், எந்திருச்சு பல் வெளக்கிட்டு, டீ கடைக்கு போய்,டீயும், வடையும், சாப்டுட்டு,பேப்பர் வாங்கிட்டு வந்து, ஒரு பக்கம் விடாம படிச்சேன், அப்பறம் எட்டு
மணிக்கெல்லாம் பசிக்க ஆரம்பிச்சிடுச்சு, சரின்னு நானும்
ரூம்மெட்டும் கெளம்பி போய், நல்லா சுட சுட பொங்கலும் பூரியும் 
சாப்டு வந்து, அப்பிடியே, TV  பாத்துட்டே ஊர் நாயம் பேசிட்டு இருந்தோம்..சரியா 11  மணிக்கு மறுபடியும் போய், ஒரு டீ அடிச்சுட்டு வந்தேன்..அப்பறம் அப்பிடியே கொஞ்சநேரம் நெட்ல மேஞ்சிட்டு, 1 மணிக்கு போய் ஆந்திரா மெஸ்ல full கட்டு கட்டினேன்..வீட்டுக்கு வந்து சுகமா ஒரு தூக்கம் போட்டேன்.. சாயங்காலம் எந்திருச்சு மறுபடியும் ஒரு டீ, ரெண்டு போண்டா, அப்பறம் அப்டியே TV  பாத்துட்டு, நைட் 10 மணிக்கு போய் சில பல பரோட்டாவும் சப்பாத்தியும் உள்ள தள்ளினேன்"..

சரி, "அதுக்கு என்னடா இப்ப" ?

"அதான் நேத்து அந்த தின்னு தின்னது, வயத்துக்குள்ள கடமுட கடமுடன்னு ரயில் ஓடற 
மாதிரி இருக்கு, நான் ரெஸ்ட் ரூம் போய்ட்டு வரேன்".

இவுருதாங்க, நம்ம நண்பர் "காரி". "வயத்த கலக்குது, இதோ வந்துடறேன்" 
அப்பிடீன்னு அவசரமா சொல்லிட்டு ஓட வேண்டிய நேரத்துல கூட,
இப்படித்தான் ஒன்ற பக்கத்துக்கு பேசுவார்.கேரள பத்பநாப சுவாமி கோயிலின் சில அறை
கதவுகள் பல்லாண்டுகளாக திறக்கவேயில்லைன்னு சொல்றாங்க,
ஆனா இவரோட வாய் கதவுகள் கடந்த 25 வருஷமா மூடினதே கிடையாது..

இவர் பிறந்தது, வளந்தது, படிச்சது, எல்லாம் ஈரோடு, இப்ப வேலை பாக்கறது சென்னைல.நம்மில் சிலருக்கு நாட்டு பற்று இருக்கும், சிலருக்கு மாநில பற்று இருக்கும், சிலருக்கு மொழி பற்று இருக்கும், சிலருக்கு இனப்பற்று இருக்கும். ஆனா நம்ம காரிக்கு ஊர் பற்று ரொம்ப ஜாஸ்தி. இவர பொருத்தவரைக்கும், தமிழ்நாட்லயே, இல்ல இந்த இந்தியாவிலயே, ஏன் இந்த உலகத்துலயே, அணைத்தது ஜீவா ராசிகளும் வசிக்க
சிறந்த ஊர் ஈரோடுதான்.பெட்டிகடைல கடலைபருப்பி 
சாபிடும்போதும் சரி, சரவண பவன்ல தோச சாப்பிடும்போது சரி
பொன்னுசாமில பிரியாணி   சாபிடும்போதும் சரி இவர் என்ன சொல்வார்ணா, "என்னதான் சொல்லுங்க எங்க ஊர்ல வர்ற டேஸ்ட் வேற எங்கயும் வராது"
எங்க ஆபீஸ்ல கிட்டத்தட்ட 400  பேர் வேலை செய்றோம். ஒவ்வொருத்தருக்கும் அவங்க டீம்ல கூட வேலை செய்ற 10,20  பேர தெரியும், வெளி டீம்ல ஒரு 10,20  பேர்கூட பழக்கம் இருக்கும். ஆனா இவருக்கு ஆபீஸ்ல வேலை செய்யற 400 பேரையும் தெரியும். டெய்லி வந்து கம்ப்யுடர ஆண் பண்ணிட்டு கிளிம்பினார்ணா, 400  பேர்கிட்டயும்  போய்   அட்டன்டன்ஸ் போட்டுட்டு திரும்ப ஒரு ரெண்டு மணிநேரம் கழிச்சுதான் சீட்டுக்கு வருவார்.
புதுசா யாரவது ஈரோட்டுக்காரர் வேலைக்கு சேர்ந்துட்ட போதும், எல்லார்ட்டயும் போய், "மச்சி, இவர் எங்க ஊர்டா",, "மாப்ள , நம்ம ஊர்காரண்டா" அப்டீன்னு introduce  பண்ணிவைப்பார்,. அது மாதிரி புதுசா சேர்ற பொண்ண இவர் friendship புடிக்கற ஸ்டைலே தனி. நேர அந்த பொண்ணு இருக்கற சீட்டுக்கு பக்கத்து சீட்  ஆள்கிட்டபோய் ஒரு முக்கா மணிநேரம் மொக்க போடுவார், அப்டியே 5 நிமிஷத்துக்கு ஒரு வாட்டி அந்த பொண்ணுகிட்ட என்ன  Reaction அப்டீன்னு பாப்பார்.
லைட்டா ஒரு சிரிப்பு சிரிச்சுட்டா போதும் அடுத்த ஒருமணி நேரத்துல அந்த பொண்ணோட cafeteriaல காபி சாப்டுகிட்டு இருப்பார்.

ஆபீஸ்ல, யார்காவது எந்த பொண்ண பத்தியாவது டீடைல் வேணும்னா இவர்ட்ட தான் கேப்பாங்க. இவரும் கொஞ்ச நேரத்துல விசாரிச்சிட்டு வந்துட்டு, "அவுளுக்கு ஏற்கனேவே வேற ஆள் இருக்கு மச்சி"  அப்டீன்னு சொல்வார் . நெஜமாவே அவுளுக்கு வேற ஆள் இருக்கா, இல்ல இவர்தான் அவங்கள வேற யாரும் கரெக்ட் பண்ணிடகூடாதுன்ற ideala  இப்படி சொல்றாரா அப்டீன்னு ஒரு டவுட் ரொம்ப நாலா எனக்கு இருக்கு.

இவர்க்கு எப்ப எது நடந்தாலும் அது காமெடி தான். இவர் எப்ப என்ன பேச வந்தாலும் முதல்ல ஸ்டார்ட் பண்ற வார்த்த, "செம காமெடி மச்சி".
"டேய் மச்சி நேத்து செம காமெடி ஆயிடுச்சி, என்னாச்சு பாட்டி பாத்ரூம்ல வழுக்கி விழுந்துடிச்சி, செம காமெடி போ" ..."டேய் இந்த செம காமேடிய கேளேன், பஸ் ஸ்டாப்ல முக்கா மன்நேரமா வெயிட் பண்றேன் பஸ்ஸே வரல, செம காமடி, அப்பறம் 100 ரூவா தெண்டமா ஆட்டோக்கு குடுத்து வந்தேன்" இதுமாதிரி நடக்கற விஷயம் எல்லாம் கூட இவருக்கு காமெடி தான்.
ஒரு நாள் எனக்கு இன்சூரன்ஸ் சம்பந்தமா ஒரு டீடைல் தேவபட்டுது. சரி, இருக்கவே இருக்கார்  நம்ம காரி, அப்படீன்னு அவர்ட்ட  போய் அந்த விஷயத்த சொன்னேன்.
"பாஸ், இதென்ன பாஸ் சப்ப மேட்டரு, Just Dial  கூப்புட்டு கேட்டா சொல்லிட போறாங்க"
"oh , சரிடா மச்சி நான் கேட்டுக்கரேன்னு சொல்லிட்டு" phone பண்ண மொபைல் எடுத்தேன். "பாஸ் phone குடுங்க நான் கேட்டு சொல்றேன்" அப்டின்னு சொல்லி என்கிடேந்து மொபைல புடுங்கி டயல் பண்ணினார். அப்டியே பேசிட்டே  நாங்க இருந்த இடத்த விட்டு தள்ளி போய்ட்டார்.
ஒரு 25  நிமிஷம் கழிச்சு "பாஸ், செம காமெடி பாஸ்" அப்படீன்னு கத்திகிட்ட ஓடி வந்தார்.
"மச்சி எதுவா இருந்தாலும் பதட்ட படாம அமைதியா சொல்லு "  என்றேன்.
"பாஸ், நீங்க வேற, phone  பண்ணினனா, ஒரு பொண்ணு எடுத்துச்சி பாஸ், செம காமெடி போங்க"
"இதுல என்னடா காமெடி, இன்சூரன்ஸ் பத்தி என்ன சொன்னங்க"
"பாஸ், அதெல்லாம் விடுங்க, இந்த காமடிய கேளுங்க"
" என்னடா " ?
"அந்த பொன்னும் ஈரோடு தான்,பாஸ் " !!!

செவ்வாய், 25 அக்டோபர், 2011

7 am அறிவு - சுறா படத்திற்கு சவால் விட்ட முருகதாஸ்

கஜினிக்கு பிறகு முருகதாஸ் சூர்யா கூட்டணியில் ...ரெட் gaint  movies  - மிக பிரம்மாண்டமாக தயாரித்து இன்று வெளியாகியுள்ள 7am  அறிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. புக்கிங் துவங்கிய சில மணி நேரத்திலேய டிக்கெட்கள் விற்று தீர்ந்தன.. அதனால் நாளை வெளிவரவேண்டிய படம் இன்றே ரசிகர்களுக்கு விருந்தளிக்க வெளியானது . எதிர்பார்புகளை  பூர்த்தி செய்யததா ???

துவக்கத்தில் 1600  வருடங்களுக்கு முன்னால் யோககளை, மருத்தவம், தற்காப்பு போன்று பல கலைகளில் சிறந்து விளங்கும்  போதிவர்மன் என்ற தமிழ்நாட்டு
இளைஞன் சீனா நோக்கி புறப்படுகிறான். அங்கே ஒரு கிராமத்தில், மர்ம நோயால் இறக்கும் மக்களை தனது மருத்துவ அறிவின் மூலம் காப்பாற்றுகிறான். தனது தற்காப்பு கலைகளின் மூலம் அவர்களின் எதிரிகளை அடித்து வீழ்த்துகிறான். அதனால் அந்நாட்டு மக்கள் அவனை தெய்வமாக வழிபடுகின்றனர். தனது கலைகளை அவர்களுக்கு கற்று கொடுத்து விட்டு அங்கேயே இறக்கிறான்.
பின்னர் 1600  வருடம் கழித்து ..அதை  இந்தியாவுக்கே எதிராக சீனா பயன்படுத்துகிறது ..
இதை நவீன கால சூர்யாவும் , ஸ்ருதிஹாசனும் எப்படி  முறியடிக்கிறார்கள்  என்பதை வெள்ளித்திரையில் காண்க ..
நம்ம சூர்யா ஒரு சர்கஸ் சாகசன், சுருதி ஒரு இளம் விஞ்ஞானி, சூர்யாவுக்கு பார்த்தவுடன் சுருதி மீது காதல் ..முதல் பாதியில் கொஞ்சம் 1600  வருஷ flashback ,
கொஞ்சம் காதல், கொஞ்சூண்டு வில்லன், கொஞ்சம் கதை என்று போகும் படம் இரண்டாம் பதியின் முதல் சில நிமிடங்களில் சூடு பிடிக்கிறது...இதுவரை படம் கொஞ்சம் ஓகே..

இரண்டாம் பாதியின் இருவதாவது நிமிடத்தில் இருந்து துவங்குகிறது நமது பொறுமையின் சோதனை..
சூர்யாவின் ஒற்றை கண்ணசைவில், அடியாட்கள் கிலோமீட்டர் கணக்கில் பறந்து போய் விழுகிறார்கள்...(விஜயகாந்தே இப்படி யோசிக்கலையே ) !! வில்லனின் கண்ணசைவில், பலநூறு கார்கள் பறந்து வந்து சூர்யாவை தாக்கிறது..சூர்யா நடந்து, நடந்து தப்பிக்கிறார் ..இதே போன்று காட்சியில் விஜய் நடித்திருந்தால் ? ஐயோ பாவம் sms கள் பரந்திருக்கும்.   ஒன்றரை மணிநேர இரண்டாம் பாதியில் ஒன்னேகால் மணிநேரம் இருவரும் சண்டைபோட்டுகொண்டே இருக்கிறார்கள். கிடைக்கும் சந்தில் வரும் வசனங்கள் ..why blood ,  same blood  ரகம்...பாடல்கள் பாப்கார்ன் விற்பனை சூடுபிடிக்க உதவுகிறது ....

நிறையவே  தசாவதாரம், கொஞ்சம் எந்திர்ன் , கொஞ்சம் பன்றி காய்ச்சல் .. மூன்றும் சேர்ந்து கரைத்து  7am அறிவை படைத்திருக்கிறார் இயக்குனர்.
நீண்டுகொண்டே போகும் சண்டைகாட்சி முடிந்துடன் , திடீரென படமும் முடிந்துவிடுகிறது ... அமரும் இடத்தில் புதிதாய் ஒரு கட்டியுடன் தியேட்டரை விட்டு வெளியே வந்தால் , ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.. இங்கதான் கதைல ஒரு twistu, கொண்டாடியது விஜய் ரசிகர்கள்...